ஞாயிறு, 6 ஜூன், 2010

காலப்பெருவெளி -2

75x12=2250-மாதங்கள், 2250x30=67500-நாட்கள், 67500x24=1620000-மணித்துளிகள்,1620000-மணி நேரங்களில் நீங்கள் உறங்கும் நேரத்தை கழித்து விடுங்கள் ஏனெனில் அப்போது நாம் மரணத்தின் ஒத்திகையை நடத்திக்கொண்டு இருக்கிறோம்.ஒருநாளைக்கு 8-மணிநேரம் உறங்குவீர்களா.8x67500=540000-மணிநேரம்.1620000-540000=மீதி 1080000.நேரம்.
இதில் உங்கள் இளம் பிராயத்தையும் நீக்கிவிடலாமே.20-ஆண்டு கல்விக்கும், வாழ்வை கவனிப்பதற்கும் சரியைபோயவிடும்.20x12=240-மாதங்கள்.240x30=7200-நாட்கள்,7200x18=129600-மணிநேரங்கள்.
1080000-129600=950400=மணிநேரம்.இந்த நேரத்தில் நீங்கள் வாழ்ந்து முடித்த நாட்களை கழித்து பாருங்கள்.மரணத்தின் அருகில் நீங்கள் எவ்வளவு தூரம் நெருங்கி வந்து இருபது புரியும்.இந்த வயது வரை நாம் கழட்டியதும் என்ன என்பதும் உரைக்கும்.
இதில் நமீதா,தமனா,குஷ்பூசமூக சேவை குறித்த கவலைகள் வேறு.நம் வாழ்வை தின்று விடுகிறது.காதலில் சில காலம்,காமத்தில் சிலகாலம்,கேளிக்கையில் சிலகாலம், மதுவின் மயக்கத்தில் சிலகாலம் என வாழ்க்கை தின்று போட்ட மீதி நாட்கள் எவ்வளவு உள்ளது உன்னிடத்தில். நம் வாழ்க்கை பிறப்பு என்னும் புள்ளியில் ஆரம்பித்து மரணம் என்னும் புள்ளியை நோக்கி நகர்ந்துக்கொண்டே உள்ளதை உணர்ந்தாயா?. நாம் எதிர் கொள்ள தவிர்க்கும் அந்த கோர முகத்தை ஒரு நாள் அனைவரும் தரிசித்தே ஆகவேண்டும். நீ அதை மறந்தாலும் உன்னை அது மறக்காமல் துரத்திக்கொண்டே வந்து அடையும்.காலப்பெருவெளியில் மரணத்தின் கோரா வாயில் விழுங்கப்படும் இறையாய் நம் வாழ்வு.
இங்கு உன் இருத்தலின் மீதம் என்ன?யோனிக்குள் செலுத்தப்பட்ட உன் எச்சத்தின் மிச்சம் மட்டுமா?வாழ இடம் தந்த பூமி பந்துக்கு என்ன தந்தாய்.?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக