புதன், 26 மே, 2010

உயிர்வலி

எனக்கு நினைவு தெரிந்தநாள் முதலாய்மாமிசம் உண்ணுவதை தவிர்த்தே வந்தேன்.என்மனம் அமைதிசொருபமாக இருப்பதற்கு இதுவுமொரு காரணம்.
நான் நடக்கும் பாதையில் வெறி நாய் எதிர்பட்டாலும்,எனைப்பார்த்து சாந்தமாகவே போகிறது. கடிக்க வருவதில்லை.
வீட்டில் தேள்பாம்பு,பூரான், முதலிய விஷ ஜந்துக்கள் கூட என்னை தீண்டுவதில்லை.ஏன் என்றால் நான் எல்லா
உயிரையும் அன்போடு நேசிப்பவன், நோக்குபவன் .என்
பார்வையில் கருணையும், அன்புமே வெளிப்படும் அதை
அந்த உயிர்கள் உணர்ந்து கொள்கிறது. எனவே என்னை நட்புடனே பார்க்கிறது.
எல்லா உயிர்களையும் நான் உணவாக பார்ப்பதில்லை. எங்கும் நிறைந்த
பரம்பொருளின் மறுவடிவமாகவே பார்க்கிறேன்.இது எனது அனுபவ உண்மை.
நம் எண்ணங்களை, உணர்வுகளை, அன்பைஎல்லா உயிர்களும்
உணர்ந்து கொள்கிறது.

திங்கள், 24 மே, 2010

உயிர்வலி

மாலை நேரம் வழக்கம் போல் புத்தகத்தில் மூழ்கி கிடந்தேன்.என்நினைவை கலைத்துபோட்டது நாய்களின்
குறைப்புசத்தம்அதன் குரலில் ஆவேசமும்,குரோதமும்
வெளிப்பட்டது.எல்லா நாய்களும் ஒரே மாதிரி குரலில்
வேகத்தை காட்டியது அது தமக்குள் சண்டைப்போட்டுக்கொள்ளவில்லை எனபது மாத்திரம் புரிந்தது.
வீதியின் எதிர் திசையை நோக்கி குறைத்தபடி ஓடியது
`என்ன என ஆர்வமுடன் பார்க்க வைத்தது.தெருவின் கோடியில் நரிகொறவன் ஒருவன் கையில் நான்கு காடையும், கவ்தாரியும்எடுத்துக்கொண்டு நடந்து வந்துக்கொண்டு இருந்தான்.
பறவை,முயல்,காட்டுக்கோழிமுதலியவற்றை கொன்று
ஜீவனம் செய்வது அவன் தொழில்.பச்சை மாமிசவாசம்
உடன் காற்றில் பரவிவரும்.குளித்து பல மாதங்களாகும்
அழுக்கு தோற்றம்.வீதியில் நடக்கையில் நாய்கள் விரட்டுவது இயல்புதான் என நான்சிறுவயது முதல்நினைத்துவந்தேன்.ஆனால்..
உலகில் ஜீவனோபாயமாக எத்தனையோ தொழில்இருக்க
தன் உயிர் வளர்க்க மற்றஉயிரை வதைத்துவாழும் முறையை என்னால்ஏற்க முடியவில்லை.உயிர்வலி
எல்லாஉயிருக்கும் ஒன்றுதானே?
மனிதராய் பிறந்துவிட்ட நாம்மட்டும் எந்தவிதத்தில் உயர்ச்சி.உலகில்வாழும் ஆசையும்,ஈர்ப்பும்,நாட்டமும்
ஒன்றுதானே.ஆறாவது அறிவு உயிர்களின்மேல் கருணை
காட்டுமா விலங்குகள்போல் மற்றஉயிர்களை கொன்று
சாப்பிடுமா.எனவே எனக்கு கூட குறவர்களை கண்டால்
மனம் அருவெறுக்கும்.
அந்தகுறவன் மெல்ல வீதியைக்கடந்து போனான் நாய்களின் குறைப்பு சத்தமும் அடங்கியது.
என் சிந்தனை மெல்ல மெல்ல சுயபரிசோதனையில்
வட்டமிட்டது.
உயிர்வலி மனிதனுக்கு தெரிகிறதோ இல்லையோ விலங்குகளுக்கு தெரிகிறது.பல உயிர்களை கொன்று
பிழைக்கும் மனிதனை நாய் அறிகிறது.பேச தெரிந்த மனிதன் மனதிலும், அறிவிலும் சிக்குண்டு கிடக்கிறான்.
நுண்ணியஉணர்வு மழுங்கிவிட்டது.
உயிரினங்களை கொன்று வாழும் மனிதனின் வருகை
நுண்உணர்வால் புரிந்து எதிர்க்கிறது.
அன்பை வெளிப்படுத்தும் மனிதன்முன்னாள் நன்றியுடன்
வாலாட்டுகிறது.உதவுகிறது.உயிர்களை கொள்ளும்
ஏற்படும் அதிர்வுகள்அந்த உயிரின்வலி,உயிர்பிரியும்
போது தவிக்கும் தவிப்பு,கடைசி தாகம்இவை அனைத்தும்
பாதிக்காதா?.
என்
அனுபவத்தில் புலால் உண்ணாமல் வாழும் மனிதர்களை கண்டால் நாய்கள் குறைப்பதில்லை.

ஞாயிறு, 23 மே, 2010

வாழ்வு ஒரு விளையாட்டு

மானுட பிறப்பு எல்லாம் சுயம்புதான்.நம்பிறவி தாய்தந்தை வழியாக நிகழ்ந்தது அவ்வளவே.சுயப்ரகாசமானநிறை உணர்வு தன்னில் விரிவாக்கம்
கொள்ள,சித்தம்,மனம்,புலன்,புறஅவயவங்களை பயன்படுத்துகிறது.
உலகோடு தொடர்பும்உலகின்செயலுக்கு உறுதுணையாய் பங்காற்றிவிளையாட்டை தொடர்கிறது.இதில் நிறைஉணர்வில்
நிலை பெற்றவன் விடுதலை பெறுகிறான்.மற்றவன் மீண்டும் மீண்டும்
விளையாட வருகிறான்.விளையாடி பார்ப்போமா...