எனக்கு நினைவு தெரிந்தநாள் முதலாய்மாமிசம் உண்ணுவதை தவிர்த்தே வந்தேன்.என்மனம் அமைதிசொருபமாக இருப்பதற்கு இதுவுமொரு காரணம்.
நான் நடக்கும் பாதையில் வெறி நாய் எதிர்பட்டாலும்,எனைப்பார்த்து சாந்தமாகவே போகிறது. கடிக்க வருவதில்லை.
வீட்டில் தேள்பாம்பு,பூரான், முதலிய விஷ ஜந்துக்கள் கூட என்னை தீண்டுவதில்லை.ஏன் என்றால் நான் எல்லா
உயிரையும் அன்போடு நேசிப்பவன், நோக்குபவன் .என்
பார்வையில் கருணையும், அன்புமே வெளிப்படும் அதை
அந்த உயிர்கள் உணர்ந்து கொள்கிறது. எனவே என்னை நட்புடனே பார்க்கிறது.
எல்லா உயிர்களையும் நான் உணவாக பார்ப்பதில்லை. எங்கும் நிறைந்த
பரம்பொருளின் மறுவடிவமாகவே பார்க்கிறேன்.இது எனது அனுபவ உண்மை.
நம் எண்ணங்களை, உணர்வுகளை, அன்பைஎல்லா உயிர்களும்
உணர்ந்து கொள்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக